Monday, March 15, 2010

விதியா?! சதியா?!

அன்பு முகம் காட்ட நீ மறுக்க
ஆசை முகம் நான் மறக்க
இரு மனம் சேரும் திருமணம்
ஈனபிறவியினுடன் என புரிந்ததும்
உன்னை உதறி
ஊருக்குள் நான் வர
எட்டி உதைக்க சிலரும்
ஏய்க்க பலரும் இருக்க
ஐயோ
ஒண்ட வந்தவலோ என சுற்றத்தார் பதற
ஓட ஓட விரட்டுகிறது
விதியும் , சமூகம் - தன்
சுடு சொற்களோடும்

இது ,
விதியால் பின்னப்பட்ட சதியா
இல்லை
சதியினால் சபிக்கப்பட்ட விதியா .?!

Monday, March 8, 2010

இதய சிறை

உனைக்
கண்ட நொடி
தொலைத்தேன் என்னை
மறுநொடியே
மீட்டெடுத்தேன்
சிறைபடுத்திகொண்டேன் - உனது
இதயத்தை என் கண்களுக்குள்.....

Tuesday, March 2, 2010

ஊனம்

முன்பு
பிறரது ஊனங்களை
கேலி செய்தேன் - ஆனால்
இன்றோ நானே என்னை
நொந்து கொள்கிறேன் - ஏனென்றால்
எனது இதயம்
என் வசம் இல்லாததால்.....

காதல் குற்றம்

காதலை ஒரு குற்றமென்று
பறைசாற்றினான் பாரதிதாசன்
ஆம் ,
காதல் ஒரு குற்றம் தான்
நாம்
அதற்காக பல
தவறுகளை செய்து அதற்கு
தண்டனைகளையும் பெறுகிறோம்
அல்லவா..?!

காதல் அர்த்தம்

காதல் மிகவும் சோகமானது
ஆனால் சுகமானது
புரிந்தவர்களுக்கு அது
புனிதமானது
புரியாதவர்களுக்கு அது
பொழுதுபோக்கு....

காதல்

காற்றினும் கடிய வேகத்தில்
செல்லகூடிய காலக்குதிரைகள்
கால் இடறிக் காண நேரம்
நிற்குமிடம் தான் - காதல்

Wednesday, February 10, 2010

பிறப்பு இறப்பு

மனிதன் தான்
அழப்பிறக்கிறான் - பிறர்
அழ இறக்கிறான் .

மரம் நடு விழா

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
நாட்டுக்கு பல மரம் வளர்ப்போம் - என
மேடையில் முழங்கிய - மரக்கடை அதிபரின்
கடையை நிறைத்தது
வெட்டிய மரங்கள்...

ஹார்ட் அட்டாக்

மனிதனின் உயிருக்கு
ஸ்டார்ட் இம்மீடியட்லி என எமன்
அடிக்கும் தந்தியின்
பெயர் தான் - ஹார்ட் அட்டாக் .

மழை

உலகில் பாவிகள் செய்யும் அக்கிரமங்களை
காண முடியாமல் வானத்தில் இருக்கும்
வருண பகவான் வடிக்கின்ற கண்ணீர்தான்
மழையாக இருக்குமோ?...

ஜோதிடம்

மரத்தடி ஜோதிடர் தனக்கு
நெடு ஆயுள் என்றார் - மறு நாளே
மரம் விழுந்து அவர் மரணம்...

காந்தியம்

காந்தியத்தை பற்றி மேடையில் முழங்கிய
கதர் வேட்டிக்காரனின் கையில் கிடந்தது
ஜப்பான் டிஜிட்டல் வாட்ச்...

குழந்தைகள்

இருட்டறை
இலக்கியத்தின்
மலிவு பதிப்புகள் ....

சூரியன்

உலகில்
பகலில் நடக்கும் அக்கிரமங்களை
காண சகிக்காமல் தனக்கு
பன்னிரண்டு மணி நேரம் - போதும் என
ஒதுங்கி கொண்ட கோழை .

அநுபவம் புதுமை

- அறிதல் ( தெரிந்து கொள்ளுதல்)
நு - நுகர்தல் ( தெரிந்தனவற்றை எற்றிகொள்ளுதல்
- பகிர்தல் ( மனதினில் எற்றிகொண்டனவற்றை பகிர்ந்து கொள்ளுதல் )
- வரவேற்றல் ( பகிர்ந்து கொள்ளுவதை வரவேற்பது )
ம் - மரபு சொல் ( எல்லாம் தெரியும் என்பதனை குறிக்கும் சொல்)

Tuesday, February 9, 2010

பாத சுவடு

நின்
பாத சுவடுகளுக்காக
காத்திருக்கும் எனது வழித்தடங்கலுக்கு
எப்படியடா தெரியும் ? - நீ
உன்னவளின் நினைவுகளை
சுமந்து கொண்டு
கடந்து செல்வது ?.....

Saturday, January 30, 2010

தேடல்

உனக்குள்ளே தொலைந்து விட்ட
என்னை - எங்கெங்கோ
தேடிக்கொண்டிருக்கின்றேன் - இன்றும் ......


தனிமையில்
உனக்கான - எனது தேடல்
தொடர்கிறது - இன்றும் ......

Tuesday, January 12, 2010

என்னுள் நீ

தொலைந்த நினைவுகளாய்
தொலையாத கனவுகளாய்
என்னுள் நீ ...

குல தெய்வம்

என் குலம் விளங்க
யாரும் இல்லாமல் போகலாம் அனால்- என்
குலம் காக்கும் குல தெய்வம் -நீ
என்னுடனே இருப்பாய் அல்லவா ?!...