Thursday, October 29, 2009

உன் வார்த்தைகள் அற்ற
சமாதியில் உறங்குகிறேன் நான் - என்று
வந்து உயிர்பிக்கப் போகிறாய் என்னை ?....

Friday, October 23, 2009

என்னுள் வாசம் செய்பவனே
எங்கே - நீ
சுவாசம் செய்கிறாய் ..?!

யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் ...

ஒரு நாள் உனக்கும் தெரியாமல் என்னை

நேசிப்பாய் என்று .....

எவ்வளவு காயப்பட்டாலும் நாம் நேசித்த ஒரு
நெஞ்சத்தை நம்மால் வெறுக்க முடியாது ....
காத்திருக்கிறேன் மீண்டும் ஒரு முறை
காயப்பட........
உன்னுடைய நினைவுகள்
என்னிடம் வந்து கெஞ்சியது - ஒரு
நிமிடமாவது ஓய்வு கொடு என்று .....
உன்னிடம் சொல்ல நினைத்த
எத்தனையோ வார்த்தைகளை
மனதுக்குள் புதைத்திருக்கிறேன்.....
இப்பொழுது என் இதயமே
கல்லறையாக ........

ஒரு புரிதலுக்கான புலம்பல்

உனக்கு பிடித்தவைகள் அனைத்தும்
எனக்கு தெரியும் - என்னை உனக்கு
பிடிக்குமா என்பதை தவிர ???!!!!....